உள்ளூர் செய்திகள்

வீட்டை விட்டு இரவில் வெளியேறிய சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரம்- ஆட்டோ டிரைவர் கைது

Published On 2022-08-27 08:23 GMT   |   Update On 2022-08-27 08:23 GMT
  • மாணவி தனது பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
  • மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து அவரை வெள்ளவேடு அருகே மறைவான இடத்துக்கு கடத்தி சென்று மாணவியை ஆட்டோ டிரைவர் கற்பழித்தார்.

ஆவடி:

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பட்டாபிராமில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 24-ந்தேதி மாலையில் மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். அப்போது அவர் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மாணவி தனது பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு அன்று இரவு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அப்போது ஆவடியை அடுத்த பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் (வயது38). தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய மாணவி சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் மாணவியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். ஆட்டோவில் ஏறிய மாணவி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் கூறினார்.

இதையடுத்து மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் அவரை வெள்ளவேடு அருகே மறைவான இடத்துக்கு கடத்தி சென்று மாணவியை கொடூராக கற்பழித்தார்.

அப்போது மாணவி கூச்சலிட்டார். உடனே அங்கிருந்து ராமகிருஷ்ணன் தப்பி சென்று விட்டார். பின்னர் அந்த மாணவி அங்கிருந்து சாலை வழியாக தப்பி ஓடி வந்தார். இதைப் பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், பொதுமக்களும் அவரை மீட்டு வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் ஆவடி மகளிர் போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணனை ஆவடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News