உள்ளூர் செய்திகள்

பல்லாவரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-06-17 12:30 IST   |   Update On 2022-06-17 12:30:00 IST
  • பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டது.
  • அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளி அருண் என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாம்பரம்:

பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த தாம்பரம் சானடோரியம் காமாட்சி நகரை சேர்ந்த அர்ஜூன், பல்லாவரம், சஞ்சய் காந்தி நகரை சேர்ந்த தினேஷ் ஆகிய 2 பேரை நேற்று பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளி அருண் என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News