உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் பலி

Published On 2022-06-08 16:20 IST   |   Update On 2022-06-08 16:20:00 IST
  • சங்கராபுரம் அருகே மூட்டு வலி காரணமாக வேதனை அடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 65). விவசாயி. இவருக்கு மூட்டு வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த முனியன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News