உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை

Published On 2023-02-08 10:52 GMT   |   Update On 2023-02-08 10:52 GMT
  • வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
  • இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 4 முறை கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று 5-வது முறையாக வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் 12-ந்தேதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென அந்த கூட்டம் நாளை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்பு இன்று திடீரென அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள், மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News