உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,118 நடமாடும் முகாமில் கொரோனா தடுப்பூசி

Published On 2022-06-12 13:41 IST   |   Update On 2022-06-12 13:41:00 IST
  • புதிய வகை கொரோனா வைரஸால் மக்களுக்கு கொரோனா காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2,118 நடமாடும் முகாம்கள் நடத்தப்படுகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. 2,118 நடமாடும் முகாம்கள் இதற்காக அமைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரத்து 575 பேருக்கு முதல் தவணையும், 7 லட்சத்து 36 ஆயிரத்து 58 பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் மக்களுக்கு கொரோனா காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2,118 நடமாடும் முகாம்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News