உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு- திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-11 13:26 IST   |   Update On 2022-11-11 13:26:00 IST
  • கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், வட்டார தலைவர் மதுரைவீரன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்திற்கான திட்டங்களை முடக்குவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

திண்டுக்கல்:

பிரதமர் மோடி திண்டுக்கல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்வாகிகள் சிலரை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் சித்திக் தலைமையில் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், வட்டார தலைவர் மதுரைவீரன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்திற்கான திட்டங்களை முடக்குவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இதனைதொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News