உள்ளூர் செய்திகள்

சென்னை நந்தனத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-01-24 09:19 GMT   |   Update On 2023-01-24 09:19 GMT
  • மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்துதரக்கோரியும் மேலும் கல்வி கட்டணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னை:

சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உள்ளது. அங்கு மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவ-மாணவிகள் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்துதரக்கோரியும் மேலும் கல்வி கட்டணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

Similar News