உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அருகே சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த தாய்-தந்தை உள்பட 6 பேர் மீது வழக்கு

Published On 2023-09-07 08:51 GMT   |   Update On 2023-09-07 08:51 GMT
  • மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த 3-ம் தேதி இராயக்கோட்டை அருகில் உள்ள நாகனுர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
  • புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் காரிமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த 3-ம் தேதி இராயக்கோட்டை அருகில் உள்ள நாகனுர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து மாணவி இன்று காரிமங்கலம் போலீசில் நாகனுரை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 26) மற்றும் அவரது உறவினர்களான வள்ளி (45), சின்னராஜ்( 55), லட்சுமி ( 40), ஜமுனா ( 45), நவீன் ( 28) ஆகிய 6 பேர் மீது காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News