உள்ளூர் செய்திகள்

சென்னிமலை, மொடக்குறிச்சியில் திடீரென கொட்டிய மழை

Published On 2023-06-21 04:30 GMT   |   Update On 2023-06-21 04:30 GMT
  • மொடக்குறச்சி, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
  • மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

சென்னிமலை:

அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. சென்னிமலை பகுதியில் நேற்று மாலை திடீரென வெயில் குறைந்த வானில் கருமேங்கள் திரண்டு காணப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் திடீரென இடியுடன் கனமழை கொட்டியது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது.

இதே போல் மொடக்குறச்சி, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

தாளவாடி-2.40, கொடுமுடி-3.20, மொடக்குறிச்சி-15.20, சென்னிமலை-22.

Tags:    

Similar News