உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 6 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

Published On 2023-03-20 11:13 GMT   |   Update On 2023-03-20 11:13 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதா அணிந்து இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
  • சுதா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் மேட்டு காலனி தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா (வயது 37). இவர் திருக்கச்சூர் அண்ணா நகரில் உள்ள சென்ட்ரிங் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதா அணிந்து இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சுதா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News