உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்

Published On 2023-01-31 07:58 GMT   |   Update On 2023-01-31 07:58 GMT
  • கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
  • 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டுக்கோழிகள், பிற வகை கோழிகளுக்கு, கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தில் நாளை 1-ந் தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News