உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் "செஸ் ஒலிம்பியாட்" போட்டியால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகும் "செஸ்"

Published On 2022-08-08 10:29 GMT   |   Update On 2022-08-08 10:29 GMT
  • மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோரப்பகுதி மீனவர்கள் ஓய்வு நேரத்தில் சமூகநல கூடங்களில் கற்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வழக்கம். தற்போது அவர்கள் செஸ் விளையாட துவங்கியுள்ளனர்.
  • சிறுவர்கள் பலரும் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி துவங்கிய நாளில் இருந்தே ஆன்லைன் வழியாக நுழைவுச்சீட்டு வாங்கியவர் போட்டியை நேரில் பார்க்க முழு நேரம், ஒரு மணி நேரம் என அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் பள்ளி மாணவர்கள், செஸ் ஆர்வலர்கள், போட்டி தேர்வானவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். நாளையுடன் முடிவடைவதால் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் "போர் பாய்ண்ட்ஸ்" அரங்கத்தில் செஸ் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இதனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் செஸ் விளையாட்டு பிரபலமாகி உள்ளது. நகரம் மற்றும் பட்டிதொட்டி எங்கும் "செஸ் ஒலிம்பியாட்" பற்றி பேசப்பட்டு வருவதுடன் செஸ் விளையாட்டு தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.

மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோரப்பகுதி மீனவர்கள் ஓய்வு நேரத்தில் சமூகநல கூடங்களில் கற்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வழக்கம். தற்போது அவர்கள் செஸ் விளையாட துவங்கியுள்ளனர். அப்பகுதி சிறுவர்கள் பலரும் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News