பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு அடி-உதை
- பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த சக பயணி ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த 28 வயதான பெண் தனது 8 வயது குழந்தையுடன் கேரளாவில் நடைபெற்ற தோழியின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர் திரும்பினார். பொள்ளாச்சி வந்த அவர் அங்கிருந்து திருப்பூருக்கு பேருந்தில் புறப்பட்டார். அவருடன் பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த சக பயணி ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். எச்சரித்தும் அந்த நபர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண் பேருந்து நடத்துனரிடம் புகார் தெரிவித்து சத்தமிட தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து தாக்கினர்.
பின்னர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் வந்ததும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.