திருவேற்காட்டில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு
- திருவேற்காடு நகராட்சியில் நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது.
- திருவேற்காடு நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திருவேற்காடு நகராட்சியில் நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது. இதற்காக பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த பேனர்கள், சுவரொட்டிகளை அகற்றி தூய்மை செய்யப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் மரம் நடுதல், வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம், நடமாடும் வாகனம் மூலம் இயற்கை உரம் விற்பனை, தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழிப்புணர்வு மெகா கோலம் வரையப்பட்டு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் ஆனந்திரமேஷ், நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், குடியிருப்போர் நகர்நலச் சங்க நிர்வாகிகள், நகராட்சி பணியாளர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.