உள்ளூர் செய்திகள்
ஆட்டோ டிரைவரை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு
- சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் நான்கு வாலிபர்களும் சேர்ந்து திடீரென டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தாம்பரம்:
சேலையூரை அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவரை 4 வாலிபர்கள் சவாரிக்கு அழைத்தனர். சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் நான்கு வாலிபர்களும் சேர்ந்து திடீரென டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2500-யை பறித்து தப்பி சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.