உள்ளூர் செய்திகள்

ஆரணியில் நாளை மின்தடை

Published On 2022-09-06 12:21 GMT   |   Update On 2022-09-06 12:21 GMT
சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. இதையொட்டி துணைமின் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரணி, சின்னம்பேடு, அகரம், போந்தவாக்கம், கொசவன்பேட்டை, காரணி, மங்களம், கொள்ளுமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று ஆரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மதனகோபால் தெரிவித்துள்ளார்.

Similar News