உள்ளூர் செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது

Published On 2022-09-14 13:45 IST   |   Update On 2022-09-14 13:45:00 IST
  • பாளையம்பட்டி துணை மின்நிலைத்தில் பசுவநாதன் என்பவர் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
  • மின்வாரிய அலுவலக வளாகத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசுவநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பாளையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி துணை மின்நிலைத்தில் பசுவநாதன் என்பவர் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரிடம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்த வீரம்மாள் தனது வீட்டின் பின்புறம் உள்ள மின்கம்பத்தை மாற்றி வேறு பகுதியில் அமைக்குமாறு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அப்போது மின் கம்பத்தை மாற்றி அமைக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரம்மாள் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் கொடுத்தார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின்படி ரசாயணம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை இன்று வீரம்மாள் உதவி மின்செயற்பொறியாளர் பசுவநாதனை சந்தித்து கொடுத்தார்.

அப்போது மின்வாரிய அலுவலக வளாகத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசுவநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News