உள்ளூர் செய்திகள்

அனகாபுத்தூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி

Published On 2023-03-12 12:22 IST   |   Update On 2023-03-12 12:22:00 IST
  • தலையில் பலத்த காயம்அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்
  • விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது25). இவர் மதுரவாயலில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்,

இந்த நிலையில் நேற்றும் இரவு அவர், பெருங்களத்தூரில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் புறவழிசாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அனகாபுத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

இதில் தலையில் பலத்த காயம்அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான ராஜேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News