உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

Published On 2024-11-05 14:57 IST   |   Update On 2024-11-05 14:57:00 IST
  • இருதரப்புக்கும் இடையே மோதலை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
  • உதயகுமாரின் இந்த செயல்பாட்டால் பொது அமைதிக்கும் கட்சியின் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உதயகுமார் அத்துமீறி அவதூறாக பேசி சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுத்தி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தருமபுரி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் கடந்த 24-ந்தேதியன்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பின் போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையைப் பெற்று ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை நேரிலேயே வந்து முற்றுகையிட்டு அவர் எங்கும் நடமாட முடியாத ஒரு நிகழ்வை தமிழகத்தில் அவர் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்க தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

இதில் இருதரப்புக்கும் இடையே மோதலை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.

உதயகுமாரின் இந்த செயல்பாட்டால் பொது அமைதிக்கும் கட்சியின் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி செயல்பட்டு வரும் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு மனுவில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News