உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூடுதல் போலீசார் குவிப்பு

Published On 2022-07-07 04:48 GMT   |   Update On 2022-07-07 04:48 GMT
  • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தரப்பினர் புகார் அளித்தனர்.
  • இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, ஜூலை.7-

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை யில் அ.தி.மு.க. தலைமை கழகம் உள்ளது. அ.தி.மு.க. வில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி உள்ள நிலையில் எடப் பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே உச்சக்கட்ட மோதல் வலுத்து வருகிறது. கட்சியிலும் குழப்பம் நீடிக் கிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் அதற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், பொதுக்குழு வுக்கு அனுமதி அளிக்கக் கோரி எடப்பாடி பழனி சாமி தரப்பினரும் மாறி மாறி கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இரு அணிகளிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் தரப்பினர் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கூடுதல் பாது காப்பு வழங்க கோரி ராயப் பேட்டை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து நேற்று காலை முதல் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக் காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News