உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

Published On 2022-08-08 09:58 GMT   |   Update On 2022-08-08 09:58 GMT
  • நவரத்தினம் மாலைகளுடன் தங்க கவசத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
  • இதைத்தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தியாகி விஸ்வதாஸ் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

பின்னர் நவரத்தினம் மாலைகளுடன் தங்க கவசத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத்தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News