சங்கரன்கோவிலில் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசாரம்: பெண் உள்பட 3 பேர் கைது
- போலீசார், பெண் காவலர்களுடன் சென்று வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
- சோதனையில் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் விபசாரம் நடப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சிலர் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், பெண் காவலர்களுடன் சென்று அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அங்கிருந்த ஒரு பெண்ணை மீட்ட போலீசார், அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த மகேஸ்வரியை (வயது 32) கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கடந்த சில மாதங்களாக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
மேலும் அங்கிருந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த மாரித்துரை (24), சங்கரன்கோவிலை சேர்ந்த சுதாகர் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.