உள்ளூர் செய்திகள்

காசிமேட்டில் ஆதிதிராவிடர் விடுதியில் 100 மாணவர்கள் திடீர் போராட்டம்

Published On 2023-03-01 08:45 GMT   |   Update On 2023-03-01 08:45 GMT
  • விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி சுமார் 100 மாணவர்கள் விடுதியில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தரமான உணவு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பெரம்பூர்:

காசிமேடு, சூரிய நாராயணன் சாலையில் ஆதிதிராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர் விடுதி உள்ளது.

இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவர்கள் விடுதி பொறுப்பாளர் ராதிகாவிடம் தெரிவித்தனர். அதேபோல் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி சுமார் 100 மாணவர்கள் விடுதியில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஐட்ரீ்ம் மூர்த்தி, சப்-கலெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தரமான உணவு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 12 மணியளவில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News