உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் சி 20 சர்வதேச மாநாடு - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

Published On 2023-05-27 13:53 GMT   |   Update On 2023-05-27 13:53 GMT
  • மாமல்லபுரத்தில் சி-20 சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது.
  • இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரம்:

உலகம் ஒரே குடும்பம் என்ற நோக்குடன் வசுதெய்வ குடும்பகம் என்ற பெயரில் சின்மயா மிஷன் நடத்தும் சி-20 சர்வதேச 3நாள் மாநாடு மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் அரங்கத்தில் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

சி-20 இந்தியா-2023 என்பது ஜி20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும்.

இந்த சி-20 மாநாட்டில் ஆன்மிகம், ஒருமைப்பாடு மேலாண்மை, கலாசாரம், எளிமைத்துவம், மோதல் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் உணர்வு உள்ளிட்ட முன்னுதாரணங்களைப் பற்றி ஆராய்ந்து விவாதிக்க உள்ளனர்.

நாளை இசையமைப்பாளர் இளையராஜாவும், நாளை மறுநாள் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News