உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

Published On 2023-04-13 08:41 GMT   |   Update On 2023-04-13 08:41 GMT
  • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
  • சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலசந்திரன் ‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

திருச்செந்தூர்:

தமிழ் கனவு தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமை யையும், சமூக சமத்துவத் தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்பு களையும் இளம் தலை முறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மா பெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப் புரை நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடத்து வதற்கு தமிழக முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.

அதன்படி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெ க்டர் புகாரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலசந்திரன் 'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்' என்ற தலைப்பிலும், இணைய தலைமுறையும் இட ஒதுக்கீடும் என்ற தலைப்பில் கார்த்திகை செல்வனும் சிறப்புரையாற்றினர்.

இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி, நாசரேத் மா்கா சியஸ் கல்லூரி, சாயர்புரம் போப் கல்லூரி, தூத்துக்குடி ஜி.யு. போப் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் குமரகுரு சுவாமிகள் கலை கல்லூரி ஆகிய கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், பெருமித செல்வன் பெருமித செல்வி விருதுகளும், கேள்வியின் நாயகன், நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்தில் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதில், திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் சிறுதானியங்கள் மூலம் பாரம்பரிய உணவு, மகளிர் திட்ட மூலம் பனை சார்ந்த பொருட்களும், தூத்துக்குடி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அகழாய்வு குறித்து புகைப் படங்கள் வைக்கப் பட்டிருந்தன. நிகழ்ச்சிகளை ஆதித்தனார் கல்லூரி தமிழ் துறை தலைவர் கதிரேசன் ஒருங்கிணைத்து வழங் கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் (பயிற்சி) பிரபு, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் அமிர்த கண்ணன், கல்லூரி கண்கா ணிப்பாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி நன்றி கூறினார்.

Tags:    

Similar News