உள்ளூர் செய்திகள்

கோடாள அம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை

Published On 2023-08-29 15:04 IST   |   Update On 2023-08-29 15:04:00 IST
  • தனிநபர் ஒருவர் அங்கிருந்த மலைக்குன்றுகள் மற்றும் பாறைகளை உடைத்துள்ளார்.
  • கட்டுமான பணிகள் மேற்கொள்ளபோதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

காரிமங்கலம்,  

தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் கோடாள அம்மன் கோவிலுக்கு சொந்தமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ள நிலையில் அந்த சொத்துக்கள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு உள்ளன.இந்நிலையில் கோடாள அம்மன் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் தனிநபர் ஒருவர் அங்கிருந்த மலைக்குன்றுகள் மற்றும் பாறைகளை உடைத்துள்ளார்.

அப்போது பொதுமக்கள் தடுத்து நிறுத்த முற்பட்டபோது இந்த நிலத்தை தான் வாங்கியதாக கூறியுள்ளார். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமாக கருதப்படுவதாகும், இந்த நிலத்தை வாங்கியது செல்லாது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோடாள அம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நேற்று முன்தினம் 12 கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் கவுண்டர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்கோடாள அம்மன் கோவில் நிலத்தை மீட்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, விழா நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நிலத்தை வாங்கியதாக கூறப்படும் நபர் இந்த நிலம் தனக்கு சொந்தம் என்பதை குறித்தும் அப்பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளபோதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இதை அடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, சபி ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.12 கிராம ஊர்க்கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் திரளாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News