ஆரணியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி
- ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
- தூட்டார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பெரியபாளையம்:-
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பஜார் வீதியில் ஸ்ரீராஜமன்னார் கிருஷ்ண பஜனை மந்திர தேவஸ்தான திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை மூலவருக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை சிறப்பு பூஜை, சிறப்பு ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன்பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க, வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும், ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்ரீ ஆதி லட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தூட்டார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.