உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் கோ ரதத்தில் பவனி

Published On 2023-02-02 08:59 GMT   |   Update On 2023-02-02 08:59 GMT
  • செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருநாள் கொண்டாடபட்டு வருகிறது.
  • கோ ரதத்தில் முக்கிய ரதவீதிகளில் சுவாமி- அம்பாள் பவனிவந்தனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை குலசேகர நாத சுவாமி கோவிலில் தைப்பூச திருநாள் கொண் டாடபட்டு வருகிறது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை, அதனை தொடர்ந்து காலை, மாலை இரவு வேளையில் சுவாமி, அம்பாள் வாகனத்தில் ஏழுந்தருளி வானவேடிக்கையுடன் திருவீதி உலா என நிகழ்ச்சி களை மண்டகப்படிதார் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் 7-ம் திருநாளான நேற்று சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கி மாலை பல்லக்கில் சுவாமி- அம்பாள் வீதி உலாகாட்சியும், தொடர்ந்து கோ ரதத்தில் முக்கிய ரதவீதிகளில் சுவாமி- அம்பாள் பவனிவந்தனர்.

கோ ரதத்தை வடம்பிடித்து இழுத்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு ரதவீதிகளின் வழியாக உலா வந்த காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இரவு 10.30 மணியளவில் சுவாமி- அம்பாள் பல்லக்கில் பவனி வருதல், நடராஜர் வெள்ளை சாத்தி சப்பரத்தில் பவனிவருதல் நடந்தது. நிகழ்ச்சியில் பஞ்சவாத்தியம் ழுழங்க திருவீதி உலா காட்சி நடைபெற்றது.

Tags:    

Similar News