எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின கருத்தரங்கம்
- அச்சம் தவிர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ -மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம் மற்றும் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அச்சம் தவிர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் மகேஷ், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சசிகலா வரவேற்றார். நிகழ்ச்சியில் லெட்ஸ் தேங்க்ஸ் பவுண்டேஷன் விழிப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அச்சம் தவிர் என்ற தலைப்பில் மாணவ -மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அதிகாரி மற்றும் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் சிவசதீஷ்குமார் நன்றி கூறினார்.