உள்ளூர் செய்திகள்

திட்ட அலுவலர் மருதுதுரை ஆய்வு செய்தார்.

அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை திட்ட அலுவலர் ஆய்வு

Published On 2022-07-23 14:31 IST   |   Update On 2022-07-23 14:31:00 IST
  • மக்கள் நல்வாழ்வுத்துறை திட்ட அலுவலர் மருதுதுரை ஆய்வு செய்தார்.
  • அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போதிய கட்டிட வசதி மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தது.

மதுக்கூர்:

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போதிய கட்டிட வசதி மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து அதிராம்பட்டினம் பொதுமக்கள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி அதிராம்ப ட்டினம் மருத்துவமனையில் அதிரை டாக்டர் மருதுதுரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிராம்ப ட்டினம் நகராட்சிதலைவர் தாகிர் அம்மாள் அப்துல் கரீம், துணைத் தலைவர் ராமகுணசேகரன் மற்றும் கவுன்சிலர்கள் அதிராம்பட்டினம் மருத்துவமனையை 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்கள்நியமிக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்தெரிவி த்தார். இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வழங்க ப்பட்டது.

Tags:    

Similar News