உள்ளூர் செய்திகள்

வெயிலால் வெறிச்சோடி கிடக்கும் உடன்குடி பஜார்.

உடன்குடியில் சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடிய சாலைகள்

Published On 2022-06-13 09:33 GMT   |   Update On 2022-06-13 09:33 GMT
  • உடன்குடியில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
  • குளிர்பானங்களை குறைந்த விலையில் விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில்கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது. கோடையை மிஞ்சும் அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

காலை 10 மணிக்குமேல்மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியேவர மக்கள் தயங்குகின்றனர்.அவசர தேவைக்கு மட்டுமே வெளியில் வருகின்றனர். குளிர்பான கடைகளில் கரும்புசாறு, பழச்சாறு, எலுமிச்சை சாறு என பல வகையான சாறுகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குளிர்பானங்களை குறைந்த விலையில்விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை இதனால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Tags:    

Similar News