உள்ளூர் செய்திகள்

பகண்டை கூட்டு ரோடு அருகே வாலிபர் திடீர் சாவு

Published On 2023-07-01 07:54 GMT   |   Update On 2023-07-01 07:54 GMT
  • சம்பத் அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார்.
  • பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே பேரால் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் சம்பத்(வயது35) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பழைய சிறுவங்கூரில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார். மறுநாள் காலையில் சம்பத் மயங்கிய நிலையில் கிடந்ததாக தொிகிறது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News