உள்ளூர் செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்களை படத்தில் காணலாம்

படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சாகசம் - கடிவாளம் போடுமா போலீஸ்!

Published On 2022-06-15 07:03 GMT   |   Update On 2022-06-15 07:03 GMT
  • படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் :

படியில் பயணம் நொடியில் மரணம்என்ற வாசகத்தை, பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கவனித்திருக்க முடியும். ஆனால் இந்த வாசகம் வெறும் எழுத்தளவில் மட்டுமே உள்ளது.பெரும்பாலான பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதை நாம் அன்றாடம் பார்க்க முடிகிறது.

தங்களை ஹீரோவாக கற்பனை செய்து கொள்ளும் இன்றைய இளம் தலைமுறையினர் சிலர், இதுபோன்ற சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்.அவ்வாறு திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டை அருகே கோவை செல்லும் தனியார் பஸ் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பஸ் முழுவதும் பயணிகள் நிறைந்திருக்க ஏறும் வழி, இறங்கும் வழி என இரண்டு பக்கமும் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களில் சிலர் ஒற்றைக்காலை ஆட்டியபடி தங்களது ஹீரோயிசத்தை காண்பித்தபடி சென்றனர்.பின்னால் காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இது போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News