உள்ளூர் செய்திகள்

இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

Published On 2023-02-19 07:34 GMT   |   Update On 2023-02-19 07:34 GMT
  • இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
  • கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மீனவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மீனவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகளை மனுக்கள் மூலம் மற்றும் வாய்மொழியாகவும் பதிவு செய்தனர். அவர்களுக்கு தீர்வுகள் அளிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் கூறியதாவது:-

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கும் முறை எளிதாக்கப்பட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான இரட்டைமடி மற்றும் சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேதமடைந்த படகு களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை மிக விரைவில் வழங்க அறிவுறுத்தப்படும். ரோந்து நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது இந்த ஆண்டு மட்டும் சுமார் 420-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும் ரூ. 80 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீடித்த நிலையான மீன் பிடிப்பை ஏற்படுத்த மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாமகேஸ்வரி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News