உள்ளூர் செய்திகள்

"வாட்ஸ்அப்" உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் பணமோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

Published On 2022-07-14 09:01 GMT   |   Update On 2022-07-14 09:01 GMT
  • குறிப்பாக வாட்ஸ்அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், மாவட்ட கலெக்டர் புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன.
  • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மயிலாடுதுறை:

வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதளத்தில் போலியான பெயரில் கணக்குகளை வைத்திருக்கும், பொதுமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் பணமோசடிக்கான முயற்சிகள் தற்பொழுது நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

குறிப்பாக வாட்ஸ்அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், மாவட்ட கலெக்டர் புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற பணமோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

எனவே பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கவனமாக இருப்பதுடன் போலியாக உருவாக்கப்படும் வெவ்வேறு செல்போன் எண்கள் வயிலாக பணம் கேட்பவர்களை முற்றிலும் புறக்கணித்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News