உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த பள்ளி மாணவ,மாணவிகளை படத்தில் காணலாம்.

சரக அளவிலான போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-09-24 16:38 IST   |   Update On 2023-09-24 16:38:00 IST
  • சரக அளவிலான போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் வளையபந்து, மேசைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

சரக அளவில் நடைபெற்ற வளையப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் U-14 இரட்டையர் பிரிவில் அஜய்ஜோதி மற்றும் துர்காபிரசாந்த் முதலிடமும், U-17 ஒற்றையர் பிரிவில் தண்டபாணி முதலிடமும், இரட்டையர் ஆண்கள் பிரிவில் தண்டபாணி மற்றும் ஜெயக்குமார் முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

இறகுப்பந்து போட்டியில் U-14 ஆண்கள் இரட்டையர் பிரிவில் சபரி மற்றும் ஹரிபிரகாஷ் முதலிடமும், U-17 ஆண்கள் இரட்டை யர் பிரிவில் கிஷோர் மற்று ம் ஸ்ரீநிதிஷ் இரண்டா மிடமும், U-19 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாணக்கி யன்முதலிடமும், இரட்டையர் பிரிவில் சாணக்கியன் மற்றும் மோகித் முதலிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். U-19 பெண்கள் ஒற்றையர் பிரிவில் தர்ஷினிஸ்ரீ முதலிட மும், இரட்டையர் பிரிவில் தர்ஷினிஸ்ரீ மற்றும் ஷிவானி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

மேசைப்பந்து போட்டியில் U- 14 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராம்கிஷோர் முதலிடமும், இரட்டையர் பிரிவில் ராம்கிஷோர் மற்றும் கீர்த்திவாசன்முதலிடமும், U- 19 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கெவின் இரண்டாமிடமும், இரட்டையர் பிரிவில் கெவின் மற்றும் இஜாஸ் முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். U- 14 பெண்கள் ஒற்றையர் பிரிவில் மிஸ்பா முதலிடமும், இரட்டையர் பிரிவில் மிஸ்பா மற்றும் ஆயிஷா முதலிடமும், U- 17 பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித்ரா முதலிடமும், இரட்டையர் பிரிவில் சுமித்ரா மற்றும் அட்ஷயா முதலிட மும், U- 19 பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழ்மதி முதலிடமும், இரட்டையர் பிரிவில் தமிழ்மதி மற்றும் வர்ஷா முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்க ளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்த குமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின ்தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News