உள்ளூர் செய்திகள்

வள்ளியூர் சூட்டுபொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி 109-வது குருபூஜை தொடக்கம்

Published On 2022-11-30 09:23 GMT   |   Update On 2022-11-30 09:23 GMT
  • ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழாவும் நேற்று அதிகாலை வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
  • வருகிற 3-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.

வள்ளியூர்:

வள்ளியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள சூட்டுபொத்தையடி வாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழாவும் நேற்று அதிகாலை வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் காலை 10 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.

இதில் ஆயிரகணக்கான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

திருவிழா நாட்களின் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெறுகிறது. இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ணா சித்திரகூடத்தில் லலிதகலா மந்திர் கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை பெரியபுராணம் நாட்டிய நாடகம் நடைபெற்றது.

வருகிற 3-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் வழங்கப்படுகிறது. 4-ந் தேதி காலை 10 மணிக்கு குருபூஜை நடைபெறுகிறது. 6-ந் தேதி சூட்டு பொத்தை மலைமீது திருகார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 7-ந் தேதி குருஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது.

8-ந் தேதி பவுர்ணமி கிரிவல வழிபாடும் இரவு விளக்குபூஜை வழிபாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News