உள்ளூர் செய்திகள்
- இப்பகுதியில் வசித்து வரும் அரியவகை புள்ளி மான்கள் இரை தேடி வழி தவறி கிராமத்திற்குள் வந்து விடுகிறது.
- தப்பியோட வழி இல்லாமல் சிக்கிய அரியவகை புள்ளி மானை நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அடுத்த பாகசாலை, தேத்தாக்குடி, தென்னலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் அரியவகை புள்ளி மான்கள் வசித்து வருகிறது. அவ்வப்போது இரை தேடி வயல் பகுதிக்கு வரும் மான்கள் வழி தவறி கிராமத்திற்குள் வந்து விடுகிறது.
இவ்வாறு பாகசாலை கிராமத்திற்கு உள்ளே வழி தவறி வந்த மானை அப்பகுதி நாய்கள் துரத்தி யுள்ளது. தப்பி ஓட வழி இல்லாமல் சிக்கிய அரிய வகைபுள்ளி மானை நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் விரை ந்து வந்த சீர்காழி வனத்துறை அலுவலர்கள்புள்ளி மானின் உடலைமீட்டு வனப்பகுதியில் புதைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.