உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையிலானஅறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர்.அருகில் நோயாளி பிரகாஷ் உள்ளார்.

விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை

Published On 2023-08-25 07:21 GMT   |   Update On 2023-08-25 07:21 GMT
  • மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.
  • கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து மயக்க நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையில் எலும்பியல் துறை தலைவர் அறிவழகன் ,டாக்டர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத், விக்ரம், பொன்னப்பன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், தோசிப் சுப்பிரமணியம், மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கழுத்து எலும்பில் பிளேட் பொரு த்தினர். இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டதன் பேரில் தற்போது கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். தற்பொழுது அவர் முழுமையாக குணமாகி எவ்வித துணையும் இன்றி தனியாக நடக்கின்றார்.

இது போன்ற மருத்துவ சிகிச்சையை வெளியே தனியார் மருத்து வமனையில் செய்தால் ரூபாய் 3.5 லட்சம் செலவாகும்.மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார். உண்டு உைறவிட டாக்டர் ரவிக்குமார், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சிங்காரம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News