உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பேச்சுப் போட்டி

Published On 2023-09-11 12:41 GMT   |   Update On 2023-09-11 12:41 GMT
  • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பேச்சுப் போட்டி நாளை நடைபெறுகிறது.
  • பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கு நாளை கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

கட்டுரை போட்டிக்கான தலைப்பு அண்ணாவின் பொது வாழ்வும் தமிழும், பேச்சுப் போட்டிக்கான தலைப்பு பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்னும் தலைப்பில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அன்று பரிசளிப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு கல்லூரி முதல்வர் தனபால் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News