உள்ளூர் செய்திகள்

தியாகதுருகத்தில் பாலமுருகன் சாமி சந்தனகாப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தியாகதுருகத்தில் பாலமுருகருக்கு சிறப்பு பூஜை

Published On 2022-07-24 15:41 IST   |   Update On 2022-07-24 15:41:00 IST
  • தியாகதுருகத்தில் உள்ள பாலமுருகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
  • பாலமுருகன் சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகத்தில் பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பாலமுருகன் சாமிக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாத கிருத்திகையான நேற்று காலை பாலமுருகன் சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோட்டகுளத்தில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள் சாமிக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு ராஜ அலங்காரம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News