உள்ளூர் செய்திகள்
காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
- வாசனை திரவங்களால் அபிஷேகம் நடைபெற்றது,
- சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
தருமபுரி,
தருமபுரி ஸ்ரீ கோட்டை கல்யாண காமாட்சி கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பழம், இளநீர், பன்னீர், தேன், தயிர் சந்தனம், மஞ்சள், குங்குமம், மற்றும் வாசனை திரவங்களால் அபிஷேகம் நடைபெற்றது,
பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
ஏராளமான பெண்கள் இந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.