உள்ளூர் செய்திகள்

தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது

Published On 2023-05-23 08:03 GMT   |   Update On 2023-05-23 08:03 GMT
  • தனது தந்தை ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
  • அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த தமிழரசன் தந்தையை கத்தியால் குத்தினார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மடத்தூரை சேர்ந்தவர் ராமன் (வயது 50). ஓசூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் தமிழரசன் (19). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தனது தந்தை ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த தமிழரசன் தந்தையை கத்தியால் குத்தினார்.

இதில் காயமடைந்த ராமன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். 

Tags:    

Similar News