உள்ளூர் செய்திகள்
மெட்டுக்கல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள பயிற்சி
- தென்கரை ஊராட்சி மெட்டுக்கல் கிராமத்தில் மண்வள மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
- இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அரவேணு:
கோத்தகிரி அடுத்த தென்கரை ஊராட்சி மெட்டுக்கல் கிராமத்தில் தோட்டக்கலை துறை மற்றும் மலைபயிர்கள் துறை தேசிய மண்வள மேலாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் மண்வள மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. விழாவுக்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தி பிரேம் குமார் தலைமை தாங்கினார்.
கோத்தகிரி வட்டார துணை அலுவலர் சந்திரன் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு முறை குறித்து எடுத்துரைத்தார்.
இதில் மண் ஆய்வு கூட வேளாண் அலுவலர் சாம்நாத், தோட்டக்கலை துணை அலுவலர் ஜெயக்குமார், மேலாண்மை அலுவலர் வெற்றிவேல் குமார், உதவி தோட்டக்கலை துறை அலுவலர் சவுமியா உள்பட பலர் பங்கேற்றனர்.