உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சமூக நல்லிணக்க பேரணி

Published On 2022-10-12 14:34 IST   |   Update On 2022-10-12 14:34:00 IST
  • கோத்தகிரியில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்பட்டது.
  • மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று, முழக்கம் எழுப்ப பேரணி தொடங்கியது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உரையாற்றினார். இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ராமகிருஷ்ணன், இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் மணி, பெண்கள் இணைப்பு குழுவின் சாரா, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று, முழக்கம் எழுப்ப பேரணி தொடங்கியது. பேரணி கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக பஸ் நிலையத்திலிருந்து ஜான்சன் ஸ்கொயர் காமராஜர் சிலை வரையிலும் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட், இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மக்கள் அதிகாரம், இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்தியா ஜனநாயக வாலிபர்கள் சங்கம், பெண்கள் இணைப்பு குழு, திராவிட தமிழர் கட்சியை சேர்ந்த 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News