உள்ளூர் செய்திகள்

சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார்.

காரில் சாராய பாட்டில்கள் கடத்தல் - 2 பேர் கைது

Published On 2022-07-12 14:52 IST   |   Update On 2022-07-12 14:52:00 IST
  • சொகுசு கார் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த நான்கு இரு சக்கர வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனையில் ஈடுபட்டனர்.
  • கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2000 சாராய பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிக்கு காரைக்காலில் இருந்து அதிக அளவில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சீர்காழி அருகே வள்ளுவகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், அசோக் குமார், சிதம்பரம் ராஜாஜி, மற்றும் தனிப்பிரிவு காவலர் மூர்த்தி, மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் சார்லஸ் உள்ளிட்ட போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த சொகுசு கார் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த நான்கு இரு சக்கர வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது காரில் காரைக்காலில் இருந்து 2000 சாராயம் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பாண்டூர் வடக்கு வெளி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 36) மற்றும் கூத்தியம் பேட்டை பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் பிரபு (33) ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.மேலும் தப்பியோடி 4 பேர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2000 சாராய பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில்களை வளாகத்தில் ஊற்றி அழித்தனர்.

Tags:    

Similar News