உள்ளூர் செய்திகள்

ராதாபுரத்தில் போலி அனுமதி சீட்டு மூலம் லாரியில் கற்கள் கடத்தியவர் கைது

Published On 2022-06-28 09:14 GMT   |   Update On 2022-06-28 09:14 GMT
  • போலீசார் சிங்காரதோப்பு மாசான சுடலைசுவாமி கோவில் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
  • டிப்பர் லாரியில் குண்டு கற்கள் கடத்தி வரப்பட்டது.

நெல்லை:

ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் சிங்காரதோப்பு மாசான சுடலைசுவாமி கோவில் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குண்டு கற்கள் இருந்தது.

அதற்குரிய ஆவணங்களை சரிபார்த்தபோது அனுமதி சீட்டில் தேதி மற்றும் நேரத்தை திருத்தி, போலியாக வைத்து கொண்டு லோடு ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரான கண்ணநல்லூர் மேலூரை சேர்ந்த குருநாராயணனை(வயதது 30) கைது செய்தனர்.

Tags:    

Similar News