உள்ளூர் செய்திகள்

மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-04-09 14:40 IST   |   Update On 2023-04-09 14:40:00 IST
  • சிவகங்கை நகர் மன்ற தலைவர் தலைமையில் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
  • துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

சிவகங்கையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரண்மனை வாசல் முன்பு நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.

நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீசுவரி, துப்புரவு ஆய்வாளர் கண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், வீனஸ்ராமநாதன்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News