உள்ளூர் செய்திகள்

எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

Published On 2023-07-13 12:57 IST   |   Update On 2023-07-13 12:57:00 IST
  • உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மானாமதுரை

மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை, எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன், வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், மருத்துவ அலுவலர் சந்தான வித்யா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் திரு மூர்த்தி, சுகாதார ஆய்வா ளர்கள் சதீஸ்குமார், குருபிரகாஸ், கிராம சுகாதார செவிலியர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஊர்வலம் சென்றனர்.

பின்னர் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் செயல் விளக்கம் அளித்த னர். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News