உள்ளூர் செய்திகள்

வ.உ.சி பிறந்தநாள் கொண்டாட்டம்

Published On 2022-09-09 13:00 IST   |   Update On 2022-09-09 13:00:00 IST
  • மானாமதுரையில் வ.உ.சி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
  • இதையொட்டி வ.உ.சி. சிலைகள், படங்களுக்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மானாமதுரை நகரில் பல இடங்களிலும் வ.உ.சி உருவப்படங்கள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆர்.சி தெரு பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் வ.உ.சி. படத்துக்கு முன்பு பொங்கல் வைத்து படைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கால்பிரிவு கிராமத்தில் 23-வதுஆண்டாக வ.உ.சி. மன்றம் சார்பில் வ.உ.சிதம்பிரம்பிள்ளை பிறந்தநாள் விழா நடந்தது. விழாவை கிராமம் முழுவதும் வீதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வ.உ.சி. உருவப்படத்துக்கு பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்புவனம் நகரில் வ.உ.சி. பேரவை, வெள்ளாளர் சங்கம் சார்பில் வ.உ.சி. உருவப்படங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. திருப்புவனம் ஒன்றியப் பகுதிகளிலும் மற்றும் ஏராளமான கிராமங்களில் வ.உ.சி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி வ.உ.சி. சிலைகள், படங்களுக்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News